ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துடன் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா சந்திப்பு

பெங்களூரு: ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துடன் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா சந்தித்துள்ளார். மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக விவாதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. நேற்று தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது.

ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரான கஜேந்திர சிங் செகாவத் இன்று கர்நாடக மாநிலத்திற்கு வருகை தந்துள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் உள்ள சட்டமன்ற வளாகத்தில் தற்போது ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துடன் கர்நாடக முதல்வர் எடியூரப்பா கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜா பொம்மை, நீர்வளத்துறை அமைச்சரான மாதுசாமி ஆகியோர் சந்தித்துள்ளனர். கர்நாடகாவில் அமல்படுத்தப்பட உள்ள முக்கிய நீர் மேலாண்மை திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வரும் மேகதாது அணை கட்டுவதற்காக ஒன்றிய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்ற மனுவை கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரிடம் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: