கோவை: ஆனைகட்டி அருகே பெண் யானை இறந்து கிடந்தது. அந்த யானை ஆந்த்ராக்ஸ் நோய் பாதிப்பில் இறந்தது தெரியவந்துள்ளது. கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆனைகட்டி அருகே சலீல் அலி வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் நேற்று ஈடுபட்டு இருந்தனர். அப்போது, வனத்திற்குள் பெண் யானை ஒன்று இறந்து கிடந்ததை கண்டறிந்தனர். இது தொடர்பாக மாவட்ட வனஅலுவலர் வெங்கடேஷ் மற்றும் ரேஞ்சருக்கு தகவல் அளித்தனர். பின்னர், ஆனைகட்டி மற்றும் வீரபாண்டி அரசு கால்நடை மருத்துவர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.