சென்னை: சென்னை மாநகர காவல் துறையில் 179 இன்ஸ்பெக்டர்களை பணியிடம் மாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: அடையார் மதுவிலக்கு பிரிவில் இருந்த ஆதவன் கோடம்பாக்கம் சட்டம் ஒழுங்கிற்கும், அபிராமபுரம் சட்டம் ஒழுங்கில் இருந்த சீனிவாசன் ராயப்பேட்டை குற்றப்பிரிவுக்கும், சிந்தாதிரிப்பேட்டை சட்டம் ஒழுங்கில் இருந்த அழகு, அபிராமபுரம் சட்டம் ஒழுங்கிற்கும், கீழ்ப்பாக்கம் சட்டம் ஒழுங்கில் இருந்து ஜெயராமன் அபிராமபுரம் குற்றப்பிரிவுக்கும், ஆயிரம் விளக்கு சட்டம் ஒழுங்கில் இருந்து எம்.சீனிவாசன் மயிலாப்பூர் குற்றப்பிரிவுக்கும், அண்ணாநகர் சட்டம் ஒழுங்கில் இருந்து கண்ணன் வேப்பேரி சட்டம் ஒழுங்கிற்கும், விருகம்பாக்கம் சட்டம் ஒழுங்கில் இருந்த முகமது பரூக்கத்துல்லா பெரியமேடு சட்டம் ஒழுங்கிற்கும்.