திருச்சுழி : திருச்சுழி அருகே உள்ள ராஜகோபலாபுரம் கிராமத்தின் மையப்பகுதியில் உள்ள ஆபத்தான ஆழ்கிணற்றால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருச்சுழி அருகே உள்ள ராஜகோபலாபுரம் கிராமத்தில் 1200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இக்கிராமத்தின் மையப்பகுதியில் பயன்பாடின்றி பாழடைந்து புதர் மண்டிய நிலையில் கிணறு உள்ளது. கிணற்றுக்கு சுற்றுச்சுவரும் உயரம் குறைவாக உள்ளது. இந்த கிணற்றை ஒட்டிய சாலையில் தான் மக்கள் சென்று வருகின்றனர். குறிப்பாக இக்கிராமத்தில் சிறுவர்கள், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் இச்சாலையில் செல்லும்போது விபத்து அபாயம் உள்ளது.