தூத்துக்குடி: தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த வெயில் பொதுமக்களை கடுமையாக வாட்டி வதைத்தது. இதன் காரணமாக பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் வீடுகளுக்குள் முடங்கும் நிலை இருந்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் தூத்துக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசியது. வெயில் அறவே இல்லாத நிலையில் 10 மணிக்கு மேல் பலத்த சூறைக்காற்று வீசியது. இதன் காரணமாக நகரில் அனைத்து சாலைகளிலும் பெரும் புழுதி மண்டலம் பல அடி உயரத்திற்கு உருவானது. இதனால் சாலையோர கடைகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.