இடைப்பாடி: கொரோனா பரவல் காரணமாக கடந்த மே மாதம் 24ம் தேதி முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தற்போது, ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக சேலம் மாவட்டம், கொங்கணப்புரம் சனி சந்தை கடந்த ஒன்றரை மாதங்களாக நடைபெறாமல் இருந்தது. தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக , இன்று காலை கொங்கணபுரம் சனி சந்தை கூடியது. 48 நாட்களுக்கு பின் இன்று கூடிய சந்தைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் வியாபாரிகள் ஆடு, கோழி வாங்க வந்திருந்தனர். இருந்த போதிலும் வெளி மாவட்ட வியாபாரிகளுக்கு தகவல் தெரியததால், கூட்டம் குறைவாகவே இருந்தது.