பாணாவரம் : பாணாவரம் அருகே உள்ளது மேலேரி கிராமம். இங்கு 1,500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவ்வாறு வசிக்கும் பொதுமக்களுக்கு அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தினமும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, முறையாக பராமரிக்கப்படாமலும், மூடப்படாமலும் திறந்த நிலையில் உள்ளது. இதனால் காக்கை, குருவி போன்ற பறவைகளின் கழிவு மற்றும் காற்றில் இருந்து வரும் பல்வேறு கழிவுகள் குடிநீரில் கலப்பதால், சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளது.