சென்னையில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கூடுதலாக 42,000 சி.சி.டி.வி. அமைப்பு!: காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

சென்னை: சென்னையில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கூடுதலாக 42,000 சி.சி.டி.வி. அமைக்கப்படும் என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னை மாநகரம் முழுவதும் 1.40 லட்சம் சி.சி.டி.வி. க்கள் பழுது நீக்கி புதுப்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சைபர் குற்றங்களை தடுக்க மேலும் 4 புதிய சைபர் குற்ற தடுப்பு காவல் நிலையங்கள் ஏற்படுத்தும் திட்டம் உள்ளது எனவும் சைபர் புலனாய்வு பிரிவுக்கு என தனி துணை ஆணையரை நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

Related Stories: