சென்னை: தமிழகத்தில் ரயில்வே தண்டவாளங்களை கடக்கும் போது ரயில் மோதி இறக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. எனவே உயிரிழப்புகளை தடுக்க ரயில்வே போலீசார் பயணிகளிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஆனாலும் அவ்வப்போது உயிரிழப்புகள் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. எனவே அவற்றை முற்றிலும் தடுக்க தமிழக ரயில்வே போலீஸ் ஐஜி சுமித் சரண் நேற்று போலீஸ் அதிகாரிகளுடன் ஆன்லைனில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை மண்டல எஸ்.பி தீபா சத்தியம், டி.எஸ்.பி ஸ்டீபன், சென்னை சென்ட்ரல் இன்ஸ்பெக்டர் சசிகலா ஆகியோர் கலந்து ெகாண்டனர்.