சென்னை: தமிழகத்தில் இயங்கி வரும் 3 பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்துள்ள புகாரின் பேரில் அந்த பல்கலைக் கழகங்களில் விசாரணை நடத்த ஆய்வுக் குழு ஒன்றை உயர்கல்வித்துறை அமைத்துள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக கழகம், சிதம்பர் அண்ணாமலைப் பல்கலைக் கழகம், மதுரை காமராசர் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் நிர்வாக ரீதியாக பேராசிரியர்களுக்கு பதவி உயர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக உயர்கல்வித்துறைக்கு பல புகார்கள் வந்துள்ளன. இது குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்து இருந்தார். அதன் பேரில் தற்போது ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு ஒன்றை உயர்கல்வித்துறை அமைத்துள்ளது.