மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் 10 லட்சம் பேருக்கு கொரோனா நிவாரணம்

மதுராந்தகம்:  மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க வழிபாட்டு மன்றங்கள் மற்றும் சக்தி பீடங்கள் சார்பில் கொரோனா முதல் மற்றும் 2வது அலை காலங்களில், பாதுகாப்பு பணியில்  ஈடுபட்ட களப்பணியாளர்கள் மற்றும் ஏழைகள் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கஷாயம், கபசுர குடிநீர், அன்னதானம், மருந்துகள், மருத்துவ பொருட்கள், அரிசி மற்றும் மளிகை பொருட்கள் உள்படபல்வேறு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. சில இடங்களில் அரசு சுகாதார துறையுடன் இணைந்து தடுப்பூசி முகாம்களும் நடத்தப்பட்டன.

இதையொட்டி, சென்னையை சேர்ந்த ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், வசதியில்லாத நிலையில் உள்ளவர்களை மாநகராட்சி உதவியுடன் கண்டறிந்து சத்தான உணவு வகைகளை தயாரித்து, அவர்களது வீடுகளுக்கே சென்று வினியோகம் செய்யப்பட்டது. இந்த பணிகளை தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் அயல்நாடுவாழ் பக்தர்கள் சிறப்பாக செய்தனர். இந்நிகழ்ச்சிகள், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளாரின் மேற்பார்வையில் நடந்தது.

Related Stories: