தமிழ்நாட்டுக்கு ஜூலை 12க்குள் 15.85 லட்சம் தடுப்பூசிகள் தருவதாக ஒன்றிய அரசு உறுதி: ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டுக்கு ஜூலை 12ம் தேதிக்குள் 15.85 லட்சம் தடுப்பூசி டோஸ் தருவதாக ஒன்றிய அரசு உறுதியளித்ததாக டெல்லியில் ஒன்றிய சுகாதாரத்துறை அதிகாரிகளை சந்தித்த பிறகு தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். தடுப்பூசி உற்பத்தியில் சவால், தரச்சான்று வழங்குவதன் காரணமாக தாமதம் ஏற்பட்டதாக ஒன்றிய அரசு கூறியது. மேலும், மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: