சென்னை: தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், தமிழ் நாட்டில் உள்ள குறு, சிறு, மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நிதி தேவைகளை அறிந்து அதனை சீராகப் பூர்த்தி செய்துவரும் ஒரு முன்னோடி மாநில நிதி நிறுவனம் ஆகும். இக்கழகம் தமிழகமெங்குமுள்ள குறு மற்றும் சிறு நிறுவனங்களின் கடன் தேவையினைப் பூர்த்தி செய்திடும் பொருட்டு குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்குக் கடன் வழங்கிடும் நிதிதொழில்நுட்ப நிறுவனங்களுக்கு என்று ஒரு புதிய திட்டத்தை வகுத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் லெண்டிங் கார்ட் பைனான்ஸ் லிமிடெட் எனும் நிதிதொழில்நுட்ப நிறுவனத்திற்கு ரூ.10 கோடிக்கானக் காலக் கடனை இக்கழகம் அனுமதித்துள்ளது.