தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவன தலைவராக குறிஞ்சி என்.சிவகுமார் நியமனம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் 4.10.2007 அன்று அப்போதைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரால் துவக்கப்பட்ட நிறுவனம். இந்த சூழ்நிலையில், கடந்த 12.3.2021 முதல் தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் பதவி காலியாக இருந்ததை அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், குறிஞ்சி என்.சிவகுமாரை தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத்திற்கு தலைவராக நியமித்து உத்தரவிட்டுள்ளார். ஈரோட்டை சேர்ந்த குறிஞ்சி என்.சிவகுமார் கட்டுமான பொறியாளர் ஆவார். இவர் ஏற்கனவே ஈரோடு மாவட்ட கேபிள் டிவி உரிமையாளர்கள் நலச்சங்க தலைவராகவும், தமிழ்நாடு கேபிள் டிவி மல்டி சிஸ்டம் ஆபரேட்டர் சங்க மாநில துணைத் தலைவராகவும் உள்ளார். அதோடு மட்டுமல்லாமல், ஈரோடு மாவட்டத்தின் அரிமா சங்க தலைவராகவும் பொறுப்பு வகித்து, பல்வேறு சமூக பணிகளையும் ஆற்றி வருகிறார்.

Related Stories: