துரைப்பாக்கம்: திருவான்மியூர் மகாத்மா சாலையில் பிரபல நடிகை சனம் ஷெட்டி(35) வசித்து வருகிறார். கடந்த 3ம் தேதி, இன்ஸ்டாகிராமில் மர்ம நபர் தனக்கு ஆபாச குறுஞ்செய்திஅனுப்புவதாக திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். போலீசார், அடையாறு சைபர் கிரைம் போலீசாருக்கு புகாரை அனுப்பி வைத்தனர். அதன்பேரில், சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், திருச்சி மாவட்டம் நன்மங்கலம் பகுதியை சேர்ந்த ராய் ஜான்பால்(21) என்ற கல்லூரி மாணவன் நடிகை சனம் ஷெட்டிக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியது தெரியவந்தது. திருச்சியில் பதுங்கி இருந்த ராய் ஜான்பாலை போலீசார் கைது செய்து, சென்னை அழைத்து வந்தனர். பின்னர், அவரை திருவான்மியூர் காவல் நிலையத்தில் நேற்று ஒப்படைத்தனர். இதையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.