வேதாரண்யம் : வேதாரண்யம் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவி வந்ததால், இக்குறையை போக்க தமிழக அரசு அறிவிப்பின்படி வேதாரண்யம் தலைமை அரசு மருத்துவமனைக்கு பின்புறம் ரூ.75 லட்சம் செலவில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்க அனுமதிக்கப்பட்டு கடந்த 2 மாதங்களாக இதன் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தது.