டோக்கியோ : இதற்கு முன் இல்லாத வகையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் இம்முறை 254 பெண்கள் பங்கேற்க உள்ளதாக ஆஸ்திரேலியா ஒலிம்பிக் சம்மளேனம் தெரிவித்துள்ளது. ஒலிம்பிக் போட்டி வரும் 23ம் தேதி டோக்கியோவில் தொடங்க உள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்து வீரர், வீராங்கனைகள் ஏற்கனவே அங்கு செல்ல தொடங்கிவிட்டனர்.இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து இம்முறை 254 பெண்கள் உட்பட 472 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளதாக அந்நாட்டு ஒலிம்பிக் சம்மேளனம் தெரிவித்துள்ளது.