சென்னை: நெடுஞ்சாலைத்துறையில் முதன்மை இயக்குனர் பணியிடத்தில் ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சாலை ஆய்வாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளர் சங்கம், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர் சங்கம் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையில் 10 தலைமை பொறியாளர் பணியிடம் உள்ளது. இதில், ஒரு பணியிடம் முதன்மை இயக்குனர் பணியிடம். இப்பணியிடம் நிர்வாக பணி சார்ந்தது. ஆனால், இப்பணியிடத்திற்கு நெடுஞ்சாலை பொறியியல் பணி விதி அடிப்படையில் உதவி பொறியாளர் நிலையில் இருந்து படிப்படியாக பதவி உயர்வு பெற்று இப்பணியிடத்திற்கு வருகிறார்கள். சுமார் 40 ஆண்டுகள் இவ்விதிகள் மாற்றப்படாமல் உள்ளது.
நெடுஞ்சாலைத்துறையில் முதன்மை இயக்குனர் பணியிடத்துக்கு ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சாலை ஆய்வாளர் சங்கம் கோரிக்கை
- ஐஏஎஸ்
- முதன்மை இயக்குநர்
- நெடுஞ்சாலைகள் துறை
- சாலை கணக்கெடுப்பாளர்கள் சங்கம்
- முதல் அமைச்சர்
- எம்.கே. ஸ்டாலின்