சென்னை: தளர்வுகளினால் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், மாவட்ட கலெக்டர்கள் கூடுதல் கவனத்துடன் தொற்று பரவல் தடுப்பு பணிகளை செயல்படுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், மதுரை, திருவண்ணாமலை, நெல்லை உள்ளிட்ட சில மாவட்டங்களில் லேசாக தொற்று அதிகரித்தோ அல்லது குறையாமல் அப்படியே உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.