சென்னை: எல்ஐசி நிறுவனம் சரள் பென்ஷன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் நேற்று அமலுக்கு வந்துள்ளது. இதில் பாலிசிதாரர்கள் முதலாவதாக, பாலிசி தொகையில் அல்லது கொள்முதல் தொகையில் 100 சதவீத ரிட்டர்ன் உடன் கூடிய திட்டத்தை தேர்வு செய்யலாம். மற்றொரு திட்டமாக, கணவன், மனைவி இணைந்து ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்யலாம். இதன்படி, ஒருவர் இறந்த பிறகு, மற்றொருவருக்கு 100 சதவீத கொள்முதல் விலை ரிட்டர்ன் ஆக கிடைக்கும். உத்தரவாதம் உள்ள இந்த ஓய்வூதிய திட்டங்களில், www.licindia.in என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது எல்ஐசி அலுவலகங்களில் நேரடியாகவோ முதலீடு செய்யலாம்.