சென்னை: அரசின் அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்களில் பயில்வோர், டிரைவிங் லைசன்ஸ் பெறுவதற்கு ஆர்டிஓ அலுவலகத்தில் வாகனங்களை ஓட்டிக் காட்டத் தேவையில்லை என்ற புதிய விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. இந்தியாவில் திறமையான டிரைவர்களை உருவாக்க அங்கீகாரம் பெற்ற ஓட்டுனர் பயிற்சி மையங்களை உருவாக்க அரசு, நடவடிக்கை எடுத்துள்ளது.இப்போதுள்ள நடைமுறையின் படி, அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சி பள்ளிகளில் ஓட்டுனராக, பயிற்சி பெற்றவர்கள், ஆர்.டி.ஓ எனப்படும், ஆர்டிஓ அலுவலகத்தில், வாகனத்தை ஓட்டினால் மட்டுமே தற்போது வாகன ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது.