முக்கிய செய்தி வர்த்தகம் வீடுகளில் பயன்படுத்தப்படும் மானிய சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு; ரூ.850-ஆக அதிகரிப்பு: நள்ளிரவு முதல் அமல் Jul 01, 2021 அமல் சென்னை: வீடுகளில் பயன்படுத்தப்படும் மானிய சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது. வீடுகளுக்கு சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.825லிருந்து ரூ.850-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல், மே, ஜூனில் சமையல் சிலிண்டர் விலை ரூ.825-ஆக இருந்த நிலையில் 3 மாதத்துக்கு பின் உயர்த்தப்பட்டுள்ளது. வர்த்தக சிலிண்டருக்கான விலை ரூ.84.50 அதிகரித்து ரூ.1687.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய விலை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு சாமானிய மக்களை பாதித்த நிலையில் சமையல் எரிவாயு விலை உயர்வும் அதிகரித்து வருவது இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. வீடுகளில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் 1 மற்றும்16ஆம் தேதி என இருமுறை மாற்றியமைக்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் ரூ.25 உயர்த்தப்பட்டது. 16ஆம் தேதி 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மேலும் 25 ரூபாய் உயர்ந்தது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் சமையல் எரிவாயு சிலிண்டர் 100 ரூபாய் உயர்ந்தது. மார்ச் 1ஆம் தேதியன்று மீண்டும் 25 ரூபாய் உயர்ந்து ஒரு சிலிண்டர் 835 ரூபாய் என்ற விலைக்கு விற்பனையானது. இதனால் எதிர்கட்சியினர் பல மாநிலங்களில் போராட்டம் நடத்தின. இதனையடுத்து மார்ச் 31ஆம் தேதியன்று கேஸ் சிலிண்டர் விலையை 10 ரூபாய் குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன.
அக்னி நட்சத்திரம் நாளை துவங்க உள்ள நிலையில் 17 இடங்களில் 100 டிகிரி வெயில் கொளுத்தியது: கரூர் 112, ஈரோடு 111, வேலூரில் 110 டிகிரி பதிவு; 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; வானிலை ஆய்வு மையம் அறிக்கை
ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி மலைக்க வைக்கும் அளவுக்கு ரூ.60,000 கோடிக்கு மேல் செலவு
ஆபாச வீடியோ பிரச்னை விஸ்வரூபம் எடுப்பதால் ஆந்திராவில் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி, அமித்ஷா மறுப்பு?: சந்திரபாபு, பவன்கல்யாண் `அப்செட்’
மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தின்கீழ் 12 மாவட்டங்களில் ₹306 கோடி வசூலிப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்
தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தயார்; தேர்வு முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையத்திடம் பள்ளிக்கல்வித்துறை அனுமதி கேட்பு..!!
போதைப்பொருள் வழக்கில் கைதான ராகுலுக்கு சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பா?.. முக்கிய ஆவணங்கள் சிக்கின..போலீஸ் தீவிர விசாரணை..!!
திருவண்ணாமலை – சென்னை இடையே நாளை முதல் ரூ.50 கட்டணத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
தஞ்சை பெரிய கோயில் பராமரிப்பு பணி தொடர்பாக அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை
ராகுல் காந்தி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என பாகிஸ்தான் விரும்புவதாக பிரதமர் மோடி உரை : வாக்கு ஜிஹாத் குறித்தும் சாடல்!
மக்களவை தேர்தல் பரப்புரையில் ‘டீப் ஃபேக்’ வீடியோக்கள்: தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு..!!
மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வெடிமருந்துகளை அருகருகே வைத்து கிடங்கில் இறக்கியதே கல்குவாரி விபத்துக்கு காரணம் :எஃப்.ஐ.ஆரில் பரபரப்பு தகவல்
சென்னையில் வாட்ஸ் ஆப் குழு மூலம் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் உட்பட 2 பேர் கைது..!!
தமிழகத்தில் தீவிர வெப்ப அலைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா? :பாலச்சந்திரன் சொல்வது என்ன ?
இந்தியாவையே உலுக்கிய பாலியல் புகார் : பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்: தேடப்படும் குற்றவாளியாக எஸ்ஐடி பிரகடனம்!!
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கான இ-பாஸ் வழிகாட்டு நெறிமுறை இன்று மாலை அறிவிப்பு..!!
மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10-க்கு விற்றதன் மூலம் 12 மாவட்டங்களில் ரூ.306.32 கோடி வசூல்: ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் பதில்
கல்குவாரி வெடிவிபத்து எதிரொலி!: மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள் அனைத்தையும் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!!