சென்னை: சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் புதிய துணை வேந்தராக டாக்டர்.ஆர்.ஜெகன்நாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை தமிழக ஆளுநர் நேற்று வெளியிட்டார். தமிழக ஆளுநரும், பெரியார் பல்கலைக் கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக டாக்டர்.ஆர். ஜெகன்நாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 3 ஆண்டுகள் அந்த பதவியில் இருப்பார். புதிய துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள ஜெகன்நாதன் 39 ஆண்டுகள் கற்பித்தலில் பணியில் அனுபவம் பெற்றவர். இவர் கோவையில் உள்ள வேளாண் பல்கலைக் கழகத்தின் தலைவராகவும், வேளாண் வானிலை மற்றும் குறிப்பிட்ட இடத்தின் வானிலை குறித்த ஆராய்ச்சித்துறையின் தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.