தஞ்சை: பாப்பாநாடு காவல் நிலைய எஸ்ஐ ஜெய்ஸ்கரன் மாரடைப்பால் மரணமடைந்தார். .போலீஸ் மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தஞ்சை ஞானம் நகர் 5 வது தெருவில் வசித்து வந்தவர் ஜெய்ஸ்கரன்(55). இவர் பாப்பாநாடு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் காலை முதல் இரவு 10 மணி வரை காவல் நிலையத்தில் பணியாற்றிய ஜெய்ஸ்கரன் பணியை முடித்துவிட்டு தஞ்சையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார் . வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில் நெஞ்சு வலிப்பதாக மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். அவரது குடும்பத்தார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல 108 ஆம்புலன்சிற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மயக்கத்தில் இருந்த ஜெயஸ்கரன் உடலை பரிசோதனை செய்துள்ளனர்.