சென்னை மின் பராமரிப்பு பணிகள் நிறைவு!: தமிழ்நாட்டில் இனி மின்தடை இருக்காது...மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..!! Jun 29, 2021 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் தகவல் அமைச்சர் Senthilpalaji சென்னை: பெரும்பாலான பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்துவிட்டதால் தமிழகத்தில் இனி மின்வெட்டு இருக்காது என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் மின் விநியோகம் மற்றும் பராமரிப்பு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, அதிமுக ஆட்சியில் மின் வாரியத்திற்கு அதிக கடன்சுமை ஏற்பட்டிருப்பதாக கூறினார். மின்வாரியம் வாங்கிய கடனுக்கான வட்டி மட்டுமே பல்லாயிரம் கோடி ரூபாய் செலுத்தப்படுவதாகவும் தற்போது வட்டி தொகையில் 2 ஆயிரம் கோடி ரூபாயை குறைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். பெரும்பாலான இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் முடிவடைந்துவிட்டதால் இனி தமிழகத்தில் மின்தடை இருக்காது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி குறிப்பிட்டார். தமிழகத்தில் மின் வெட்டு இருப்பதாக சிலர் பொத்தாம் பொதுவாக புகார் கூறுவதாகும். மின்வெட்டு குறித்து புகார் அளித்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். மேலும் இனி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மட்டுமே நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நாளை நிறுத்தம்: குடிநீர் வாரியம் தகவல்
சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றுவோர் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னை கலெக்டர் தகவல்
தெற்கு – வடக்கு உஸ்மான் சாலையில் மேம்பால பணி காரணமாக தி.நகர் மேட்லி சந்திப்பில் இன்று முதல் ஓராண்டு வரை போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு
மெரினாவை சுற்றிப் பார்க்க அழைத்து வந்து வயிறு வலிப்பதாக நாடகமாடி காதலனுடன் சிறுமி எஸ்கேப்: கூல் டிரிங்க்ஸ் வாங்கி வந்த கணவன் அதிர்ச்சி
₹621 கோடி மதிப்பீட்டில், 3 ஒப்பந்ததாரர்கள் மூலம் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை இடையே உயர்மட்ட மேம்பால பணிகள் தொடங்கியது: நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தகவல்
மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள் மாற்றியமைப்பு இன்று இரவு முதல் 7 மண்டலங்களில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: லாரிகள் மூலம் வழங்கப்படும் என குடிநீர் வாரியம் அறிவிப்பு
கள்ளச்சந்தையில் மது விற்றவரிடம் ₹50 ஆயிரம் கேட்டு தாக்கிய 3 போலீசார் சஸ்பெண்ட்: தாம்பரம் கமிஷனர் அதிரடி
கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான பாதைக்கு பாதிப்பு இன்றி 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள்: ஆணையம் அனுமதி
கொலை செய்வதாக அடிக்கடி மிரட்டியதால் மது வாங்கி கொடுத்து ரவுடி படுகொலை: நண்பர்கள் பரபரப்பு வாக்குமூலம்
தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி மோதல் அதிமுக நிர்வாகியின் மகனுக்கு சரமாரி உருட்டுக்கட்டை அடி: வட்ட செயலாளர் கைது