சென்னை நூதன முறையில் கொள்ளையடித்தது எப்படி?: எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம் மையத்தில் நடித்து காட்டும் கொள்ளையன் அமீர்..!! Jun 28, 2021 எஸ்பிஐ அமீர் சென்னை: நூதன முறையில் கொள்ளையடித்தது எப்படி? என்பது குறித்து கொள்ளையன் அமீரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் அடுத்தடுத்ததாக எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். எந்திரங்களில் நூதன முறையில் கொள்ளையடித்த கும்பலை பிடிப்பதற்காக அரியானாவில் துணை ஆணையர் ஹரிகிரண் பிரசாத் தலைமையில் தனிப்படை போலீசார் முகாமிட்டிருக்கிறார்கள். தொடர்ந்து கொள்ளையனை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 9 பேர் கொண்ட கும்பல் தான் இந்த கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தி இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் அனைவரையும் அடையாளம் கண்டுபிடித்துவிட்டதாகவும் அவர்களை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், ஏ.டி.எம். கொள்ளையில் முதலில் கைது செய்யப்பட்ட அமீரை 5 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையன் அமீரிடம் தொடர்ந்து 4வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது ஏ.டி.எம். கொள்ளையன் அமீரை, கொள்ளையடித்தது எப்படி என நடித்து காட்டுமாறு போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். ஏ.டி.எம். மையத்தில் எவ்வாறு கொள்ளை நடத்தப்பட்டது என்பது குறித்து அந்த ஏ.டி.எம். மையத்திற்கே அழைத்து சென்று அமீர் செய்வதை வீடியோ பதிவு செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதன்படி சென்னை பெரியமேட்டில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். மையத்திற்கு அமீரை அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையானது தெற்கு இணை ஆணையர் நரேந்திர நாயர் மற்றும் துணை ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றுவோர் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னை கலெக்டர் தகவல்
தெற்கு – வடக்கு உஸ்மான் சாலையில் மேம்பால பணி காரணமாக தி.நகர் மேட்லி சந்திப்பில் இன்று முதல் ஓராண்டு வரை போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு
மெரினாவை சுற்றிப் பார்க்க அழைத்து வந்து வயிறு வலிப்பதாக நாடகமாடி காதலனுடன் சிறுமி எஸ்கேப்: கூல் டிரிங்க்ஸ் வாங்கி வந்த கணவன் அதிர்ச்சி
₹621 கோடி மதிப்பீட்டில், 3 ஒப்பந்ததாரர்கள் மூலம் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை இடையே உயர்மட்ட மேம்பால பணிகள் தொடங்கியது: நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தகவல்
மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள் மாற்றியமைப்பு இன்று இரவு முதல் 7 மண்டலங்களில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: லாரிகள் மூலம் வழங்கப்படும் என குடிநீர் வாரியம் அறிவிப்பு
கள்ளச்சந்தையில் மது விற்றவரிடம் ₹50 ஆயிரம் கேட்டு தாக்கிய 3 போலீசார் சஸ்பெண்ட்: தாம்பரம் கமிஷனர் அதிரடி
கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான பாதைக்கு பாதிப்பு இன்றி 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள்: ஆணையம் அனுமதி
கொலை செய்வதாக அடிக்கடி மிரட்டியதால் மது வாங்கி கொடுத்து ரவுடி படுகொலை: நண்பர்கள் பரபரப்பு வாக்குமூலம்
தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி மோதல் அதிமுக நிர்வாகியின் மகனுக்கு சரமாரி உருட்டுக்கட்டை அடி: வட்ட செயலாளர் கைது
சென்னை மாநகரில் சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க 3 மாதங்களில் கொள்கை முடிவு: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
கிளாம்பாக்கம்- செஞ்சிக்கு சென்றபோது கூடுதல் கட்டணம் வசூலித்த பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்: பொது மேலாளர் உத்தரவு