தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்த அரசுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்த அறிக்கை:  

டெல்டா பிளஸ் எனப்படும் உருமாறிய கொரோனா வைரஸ் தமிழ்நாட்டின் சென்னை, காஞ்சிபுரம், மதுரை மாவட்டங்களில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில்  மதுவகைகளை வாங்க வருவோரும், கடை ஊழியர்களும் முகக் கவசம் அணியாமல் உள்ளனர். எனவே, பொது இடங்களில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும்.  தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்த வேண்டும் என்று முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்.

Related Stories: