சென்னை: வடசென்னை மாவட்டம் ராயபுரம் பகுதி 48வது வட்டம் சார்பில், முத்தமிழ் அறிஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று ராயபுரத்தில் களப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வட்ட செயலாளர் பாலன் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி, எம்எல்ஏக்கள் ஐட்ரீம் மூர்த்தி, ஜே.ஜே.எபினேசர், ஆர்.டி.சேகர், மாவட்ட பொறுப்பாளர் இளைய அருணா ஆகியோர் பங்கேற்றனர். சென்னை மாநகராட்சி களப்பணியாளர்கள் 50 பேருக்கு அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.மேலும், அப்பகுதியை சேர்ந்த 150 பேருக்கு மளிகை, காய்கறி, அரசி, சானிடைசர், முகக்கவசம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.