சென்னை 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் மதிப்பெண்!: தமிழக அரசின் நடவடிக்கைக்கு கல்வியாளர்கள் வரவேற்பு..!! Jun 26, 2021 தமிழக அரசு சென்னை: 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் மதிப்பெண் வழங்கும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு கல்வியாளர்கள் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். வல்லுனர் குழு பரிந்துரையின் அடிப்படையில் தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்திலான 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் இறுதி மதிப்பெண்கள் வழங்கும் முறையை அரசு அறிவித்துள்ளது. இதனை கல்வியாளர்கள் வரவேற்றுள்ளனர். கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படகூடாது என்பதற்காக அரசு இவ்வாறு முடிவு செய்திருப்பதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். விகிதாச்சார மதிப்பெண் முறையால் உயர்படிப்பு மாணவர் சேர்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் முழுமைபெறாத கல்விக்கு நாம் ஏன் அவசரம் காட்ட வேண்டும் என்று மற்றொரு தரப்பு கல்வியாளர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். மாணவர் சேர்க்கைக்கு முன்பாக விருப்ப மாணவர்களுக்கு தேர்வை நடத்த வேண்டும் என்பதும் கல்வியாளர்களின் கோரிக்கையாகும். 2021 - 22ம் கல்வியாண்டில் எந்த நடைமுறையை பின்பற்ற இருக்கிறது என்பதை ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் முன்கூட்டியே தெளிவுபடுத்த வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நாளை நிறுத்தம்: குடிநீர் வாரியம் தகவல்
சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றுவோர் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னை கலெக்டர் தகவல்
தெற்கு – வடக்கு உஸ்மான் சாலையில் மேம்பால பணி காரணமாக தி.நகர் மேட்லி சந்திப்பில் இன்று முதல் ஓராண்டு வரை போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு
மெரினாவை சுற்றிப் பார்க்க அழைத்து வந்து வயிறு வலிப்பதாக நாடகமாடி காதலனுடன் சிறுமி எஸ்கேப்: கூல் டிரிங்க்ஸ் வாங்கி வந்த கணவன் அதிர்ச்சி
₹621 கோடி மதிப்பீட்டில், 3 ஒப்பந்ததாரர்கள் மூலம் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை இடையே உயர்மட்ட மேம்பால பணிகள் தொடங்கியது: நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தகவல்
மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள் மாற்றியமைப்பு இன்று இரவு முதல் 7 மண்டலங்களில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: லாரிகள் மூலம் வழங்கப்படும் என குடிநீர் வாரியம் அறிவிப்பு
கள்ளச்சந்தையில் மது விற்றவரிடம் ₹50 ஆயிரம் கேட்டு தாக்கிய 3 போலீசார் சஸ்பெண்ட்: தாம்பரம் கமிஷனர் அதிரடி
கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான பாதைக்கு பாதிப்பு இன்றி 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள்: ஆணையம் அனுமதி
கொலை செய்வதாக அடிக்கடி மிரட்டியதால் மது வாங்கி கொடுத்து ரவுடி படுகொலை: நண்பர்கள் பரபரப்பு வாக்குமூலம்
தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி மோதல் அதிமுக நிர்வாகியின் மகனுக்கு சரமாரி உருட்டுக்கட்டை அடி: வட்ட செயலாளர் கைது