சென்னை: சென்னை-பாரிஸ் இடையே நேரடி விமான சேவையை ஏர்பிரான்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் இன்று முதல் தொடங்குகிறது. இன்று முதல் ஏர்பிரான்ஸ் ஏர்லைன்ஸ், பாரிஸ்- சென்னை இடையே நேரடி விமான சேவையை தொடங்குகிறது. இன்று (சனிக்கிழமை) காலை 10.25 மணிக்கு பாரிசிலிருந்து புறப்படும் ஏர்பிரான்ஸ் விமானம் இன்று இரவு 11.45 மணிக்கு சென்னை வருகிறது. திங்கள் அதிகாலை 1.20 மணிக்கு சென்னையிலிருந்து பாரிஸ் புறப்பட்டு செல்கிறது. இந்த விமானத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் ஒன்றிய அரசின் சிறப்பு அனுமதியுடன் மருத்துவ சிகிச்சைக்காக கார்ப்பிரேட் நிறுவன பணியாளர்கள் போன்ற அத்தியாவசிய பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும்.