சென்னை ஒரு சிலரின் சுயநலத்தினால் தான் கடந்த தேர்தலில் அதிமுக தோல்வி!: சங்கரன்கோவில் அதிமுக நிர்வாகியுடன் பேசிய சசிகலா குமுறல்..!! Jun 25, 2021 அஇஅதிமுக சசிகலா குமரல் சங்கரன்கோவில் சென்னை: ஒரு சிலரின் சுயநலத்தினால் தான் கடந்த தேர்தலில் அதிமுக தோல்வியடைய நேரிட்டதாக சங்கரன்கோவில் அதிமுக நிர்வாகியுடன் தொலைபேசியில் பேசிய சசிகலா குறிப்பிட்டுள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அதிமுக நிர்வாகிகள் பலருடன் சசிகலா தொலைபேசியில் உரையாடும் ஒலிப்பதிவு வெளியாகி வருகிறது. இந்த நிலையில் இன்று ஒரேநாளில் அதிமுக நிர்வாகிகள் 3 பேருடன் பேசிய உரையாடல் வெளியாகியிருக்கிறது. சங்கரன்கோவில் அதிமுக நிர்வாகி பூசுத்துரை என்பவருடன் பேசிய சசிகலா, அதிமுக தேர்தலில் தோல்வி அடைந்தது ஏன் என்பது குறித்து பேசியுள்ளார். இதனிடையே கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக ஈரோடு புறநகர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஆர்.கந்தசாமி உள்ளிட்ட 5 பேர் அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சிந்து ரவிசந்திரன், கே.ஆர்.கந்தசாமி, எஸ்.பி. ரமேஷ், வி.சி. வரதராஜ், பி.கே.காளியப்பன் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கிவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
போலீஸ் ஆதரவுடன் மீஞ்சூர் பகுதி முழுவதும் கஞ்சா விற்பனை அமோகம்: மாணவர்கள், இளைஞர்களை காப்பாற்ற பொதுமக்கள் கோரிக்கை
மாதவரம் மண்டலம் 24வது வார்டில் உள்ள பல்நோக்கு கட்டிடத்தில் நூலகம், ரேஷன் கடை அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணிகள் தொடங்கியது: குடிநீர் வாரியம் தகவல்
நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார் நிறுவனங்களின் குடோன் கட்டுமான பணிக்கு எதிரான சிஎம்டிஏ நடவடிக்கை தவறானது: உயர் நீதிமன்றம் உத்தரவு
தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு தூக்கி எறிந்துள்ளது: விவசாயிகள்-தொழிலாளர் கட்சி குற்றச்சாட்டு
சென்னையின் 200 வார்டுகளிலும் பெண்களுக்கான நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்