டெல்லி : காவேரி நதிநீர் ஆணையத்தின் 12-வது கூட்டம் இன்று காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. ஆணையத்தின் தலைவர் திரு எஸ்.கே.ஹெல்டார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் பொதுப்பணித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர். சந்தீப் சச்சேனா,இ.ஆ.ப., காவேரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் திரு. ஆர்.சுப்ரமணியன், பொதுப்பணித்துறை, அரசு சிறப்பு செயலாளர் திரு கே. அசோகன் நீர்வளத்துறை, முதன்மை தலைமைப் பொறியாளர் திரு கே. ராமமூர்த்தி, கர்நாடக சார்பில் நீர்வளத்துறை செயலாளர் திரு ராகேஷ், இ.ஆ.ப., கேரளா சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு பி.கே.ஜோஷ், இ.ஆ.ப., பாண்டிச்சேரி சார்பில் ஆணையர் மற்றும் செயலாளர் திரு விக்ராந்த் ராஜா மத்திய நீர்வளத் துறை சார்பில் திரு நவீன்குமார், இ.ஆ.ப., மத்திய வேளாண்மைத்துறை சார்பில் டாக்டர் கோபால், இ.ஆ.ப., மத்திய ஊரக வளர்ச்சி துறை சார்பில் ஸ்ரீ சஞ்சய் அவாஸ்தி, இ.ஆ.ப., மற்றும் ஆணையத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.