சிவசங்கர் பாபா வழக்கு: இன்று அல்லது நாளை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

சென்னை: பாலியல் வழக்கில் கைதாகி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருக்கும் சிவசங்கர் பாபா இன்று அல்லது நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவர்கள் உடல் தகுதி சான்றிதழ் கொடுத்த பின்பு மீண்டும் செங்கல்பட்டு சிறையில்  சிவசங்கர் பாபா அடைக்கப்படுவார். செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவிகள் பாலியல் தொல்லை புகார் கொடுத்தனர். மாணவிகளுக்கு ஆசிர்வாதம் வழங்குவதாக கூறி அவர்களுக்கு உதட்டில் முத்தம் கொடுப்பது, கட்டியணைப்பது என எல்லை மீறி வந்த சிவசங்கர் பாபா அவர்களை தனி அறைக்கு அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த புகார்களின் அடிப்படையில் அண்மையில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே அவர் கடந்த சில நாட்களாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories: