நீட் தேர்வின் தாக்கம் குறித்து நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவுக்கு விசிக மனு

சென்னை: நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்குத் தமிழக அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.ராஜன்  தலைமையிலான குழுவிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆலோசனைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: நீட் தேர்வு முற்றாக ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் இருவேறு கருத்தில்லை. ஆனால், அதை ஒன்றிய அரசு தான் செய்ய முடியும் என்ற நிலையில் அதற்கான தீர்மானத்தை பேரவையில் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்குத் தமிழ்நாடு அரசு அழுத்தம் தர வேண்டும். நாடாளுமன்றத்தில் அதற்காகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து போராட  முன்முயற்சி எடுக்கவேண்டும்.   நீட் தேர்வை ரத்துசெய்யவேண்டும் என்ற தனது நிலைப்பாட்டுக்கு ஆதரவாகப் பிற மாநில அரசுகளின் ஆதரவைத் திரட்ட வேண்டும். அதற்காக பாஜ அல்லாத மாநில முத்ல்வர்கள் கூட்டம் ஒன்றைத் முதல்வர் உடனடியாகக் கூட்ட வேண்டும் என இந்த ஆணையம் பரிந்துரை செய்யவேண்டும்.

Related Stories: