சென்னை தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் புதிய விதியின் கீழ் நடவடிக்கை எடுத்தால் நிவாரணம் கோரி நீதிமன்றத்தை அணுகலாம்!: ஐகோர்ட் Jun 23, 2021 சென்னை: தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் புதிய விதியின் கீழ் நடவடிக்கை எடுத்தால் நீதிமன்றத்தை அணுகலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் சட்டம் 2021-ஐ கடந்த பிப்ரவரி மாதம் கொண்டு வந்தது. இந்த விதிகளை செல்லாது என அறிவிக்கக்கோரி டிஜிட்டல் நியூஸ் பப்ளிசர்ஸ் அசோசியேஷன் மற்றும் பிரபல பத்திரிகையாளர் முகுன் பத்மநாபன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு 2 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர். அதே சமயம் இந்த விதியின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் மனுதாரர் சங்கம் இடைக்கால நிவாரணம் கோரி நீதிமன்றத்தை அணுகலாம் என அனுமதி அளித்துள்ளனர். ஏற்கனவே இந்த புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை எதிர்த்து பிரபல கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா தாக்கல் செய்த வழக்குடன் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிடவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணிகள் தொடங்கியது: குடிநீர் வாரியம் தகவல்
நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார் நிறுவனங்களின் குடோன் கட்டுமான பணிக்கு எதிரான சிஎம்டிஏ நடவடிக்கை தவறானது: உயர் நீதிமன்றம் உத்தரவு
தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு தூக்கி எறிந்துள்ளது: விவசாயிகள்-தொழிலாளர் கட்சி குற்றச்சாட்டு
சென்னையின் 200 வார்டுகளிலும் பெண்களுக்கான நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
ஆர்எம்டி பொறியியல் கல்லூரியின் ஆண்டு விழா சிறந்த மாணவர்களுக்கு ரூ.35 லட்சம் பரிசு: கல்விக் குழும தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் வழங்கினார்
களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில் கொட்டி கிடக்கிறது: கொள்ளை லாபம் சம்பாதிக்க செயற்கை முறையில் பழுக்க வைப்பதால் ஆபத்து
சென்னை மாநகராட்சியில் முதல் அரையாண்டில் ரூ.382 கோடி சொத்து வரி வசூல்: கடந்த ஆண்டை விட ரூ.10 கோடி அதிகம்
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்