சென்னை 'நீட் விவகாரத்தில் யாரும் பாதிக்காதவாறு தமிழக அரசின் முடிவு இருக்கும்!: திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் பேட்டி..!! Jun 23, 2021 தமிழ்நாடு அரசு திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் சென்னை: நீட் விவகாரத்தில் அனைத்து தரப்பு மாணவர்களும் பாதிக்காத வகையில் தமிழ்நாடு அரசின் முடிவு இருக்கும் என்று திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஓய்வுப்பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான உயர்மட்ட குழு ஆய்வு செய்து வருகிறது. பொதுமக்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் அந்த குழுவிடம் மனு அளித்து வருகின்றனர். இந்த நிலையில் திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், ஏ.கே.ராஜனை சந்தித்தார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குநரகத்தில் நடந்த சந்திப்பில், நீட் தேர்வு விவகாரம் தொடர்பான மாணவர்களின் மனுக்களை உதயநிதி ஸ்டாலின் ஏ.கே.ராஜனிடம் அளித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வு எழுத காத்திருப்பவர்கள் உட்பட அனைத்து தரப்பு மாணவர்களும் பாதிக்காத வகையில் தமிழ்நாடு அரசின் நடவடிக்கை இருக்கும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் திமுக-வின் கொள்கை என்று குறிப்பிட்டார். அதன் அடிப்படையிலேயே பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
மாதவரம் மண்டலம் 24வது வார்டில் உள்ள பல்நோக்கு கட்டிடத்தில் நூலகம், ரேஷன் கடை அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணிகள் தொடங்கியது: குடிநீர் வாரியம் தகவல்
நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார் நிறுவனங்களின் குடோன் கட்டுமான பணிக்கு எதிரான சிஎம்டிஏ நடவடிக்கை தவறானது: உயர் நீதிமன்றம் உத்தரவு
தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு தூக்கி எறிந்துள்ளது: விவசாயிகள்-தொழிலாளர் கட்சி குற்றச்சாட்டு
சென்னையின் 200 வார்டுகளிலும் பெண்களுக்கான நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
ஆர்எம்டி பொறியியல் கல்லூரியின் ஆண்டு விழா சிறந்த மாணவர்களுக்கு ரூ.35 லட்சம் பரிசு: கல்விக் குழும தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் வழங்கினார்
களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில் கொட்டி கிடக்கிறது: கொள்ளை லாபம் சம்பாதிக்க செயற்கை முறையில் பழுக்க வைப்பதால் ஆபத்து
சென்னை மாநகராட்சியில் முதல் அரையாண்டில் ரூ.382 கோடி சொத்து வரி வசூல்: கடந்த ஆண்டை விட ரூ.10 கோடி அதிகம்
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு