சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் நேற்று 7,427 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 15,281 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இது குறித்து சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் நேற்று 7,427 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக நேற்று கோவையில் மட்டும் 891 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகள் மற்றும் வீட்டு தனிமையில் 61,329 பேர் உள்ளனர். மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 189 பேர் நேற்று உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 31,386 ஆக அதிகரித்துள்ளது.