சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் மாவட்ட அளவில் நடத்தப்பட்டு வருகின்றன என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் வரிசையில் நிற்பதை தவிர்க்க உடனடியாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது என உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதிலளித்துள்ளது. சென்னையில் நடமாட முடியாதவர்களுக்கு, அவர்கள் வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தமிழ்நாடு அரசு பதில் மனுதாக்கல் செய்ததை அடுத்து, வழக்கை ஜூன் 29ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.