தமிழ்நாட்டில் மதுபான கடைகளை மூட மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட்

சென்னை: தமிழ்நாட்டில் மதுபான கடைகளை மூட மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. மதுபான கடைகளை மூட உத்தரவிடக் கோரிய திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் மனுத்தாக்கல் செய்தார். கொரோனா தொற்று காலம் என்பதால் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று மனுதாரர் வழக்கு தொடர்ந்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Related Stories: