குளித்தலை எம்எல்ஏவாக இருந்தபோது பள்ளியில் ஆய்வு செய்து கலைஞர் எழுதிய குறிப்பை டிவிட்டரில் பதிவிட்ட கலெக்டர்: சமூக வலைதளங்களில் வைரல்

கரூர்: கரூர் மாவட்ட கலெக்டராக பிரபு சங்கர் கடந்த 16ம் தேதி பொறுப்பேற்றார். நேற்று முன்தினம் அவர் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் வேங்காம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி  ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்த மருத்துவ முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 1959ம் ஆண்டு குளித்தலை எம்எல்ஏவாக இருந்தபோது கலைஞர் இந்த பள்ளியில் ஆய்வு செய்தபோது எழுதி வைத்த  குறிப்பை தனது டிவிட்டரில் பக்கத்தில் கலெக்டர் பதிவிட்டுள்ளார். அதில், இன்று வேங்காம்பட்டி ஆரம்ப பாட சாலையை பார்வையிட்டேன். இரண்டு ஆசிரியர்களும் இருந்தார்கள். மொத்த மாணவர்கள் 107ல், இன்று வருகை தந்திருந்தவர்கள் 71 பேர். இந்த பள்ளிக்கென கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம் மேல் மரங்கள் உளுத்துப்போயிருக்கின்றன. அவை  உடனடியாக கவனிக்கப்பட்டால் நலம். ஆசிரியர்கள் நன்கு பணியாற்றுவதாக பொதுமக்கள் பாராட்டினார்கள். மாணவர்களின் சுகாதாரம் இன்னும் அதிகமாக  கவனிக்கப்படுதல் நன்று. இவ்வாறு கலைஞர் எழுதியுள்ளார். கலெக்டர் வெளியிட்ட அந்த குறிப்பு  தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories: