திருமங்கலம்: கள்ளிக்குடி அருகேயுள்ள அரசபட்டி பஞ்சாயத்து அலுவலகம் சிதைவடைந்து மழைக்கு ஒழுகி வருவதால் அலுவலக பணிகள் நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கள்ளிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்டது டி.அரசபட்டி கிராமம். இந்த கிராமத்தில் பஞ்சாயத்து அலுவலகம் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. கடந்த ஆட்சி காலத்தில் சரிவர பராமரிப்பு பணி செய்யாததால் தற்போது பஞ்சாயத்து அலுவலகத்தின் பல்வேறு பகுதிகளில் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. மழைக்காலங்களில் அலுவலகத்தின் பெருபாலான பகுதிகளில் ஒழுகுவதால் ஆவணங்களை பராமரிப்பதில் கடும் சிரமங்கள் உண்டாகின்றன. பஞ்சாயத்து கூட்டங்கள் நடத்த கூட அலுவலகத்தில் சரிவர இடம் இல்லாமல் பஞ்சாயத்து நிர்வாகம் திணறிவருகிறது.