சென்னை தமிழகத்தில் கட்டப்பட்டு வரும் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கான பணிகளை நடப்பாண்டே முடிக்க பொதுப்பணித்துறை திட்டம்..!! Jun 16, 2021 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை: தமிழகத்தில் கட்டப்பட்டு வரும் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டுமான பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது. சென்னை கிண்டியில் புதிய திட்டங்கள் மற்றும் திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது. அப்போது மதுரையில் அமையவுள்ள கலைஞர் நூலகம், கிங்ஸ் மருத்துவமனையில் அமையவுள்ள பன்னோக்கு மருத்துவமனை மற்றும் மறைந்த எழுத்தாளர் சி.ராஜநாராயணனுக்கு அமைக்கப்படவுள்ள மணிமண்டபத்திற்கான மதிப்பீடு ஆகியவற்றிற்கான வரைபடங்களை விரைந்து வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதுமட்டுமின்றி அரசு துறைசார்ந்த கட்டிடங்களை கட்ட ஒப்பந்தம் போடும் நாளிலேயே பணிகளை முடிக்கும் தேதியையும் குறிப்பிட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். இதேபோல் தமிழகத்தில் கட்டப்பட்டு வரும் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டுமான பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள்ளேயே முடிக்கப்பட வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தியுள்ளார். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 6 மாவட்டங்களுக்கான மாவட்ட ஆட்சியர் கட்டடம் மற்றும் பல்வேறு அரசு துறைகளுக்கான அமைக்கப்படும் கட்டுமானங்களின் தற்போதைய நிலை குறித்தும் அதிகாரிகளிடம் அமைச்சர் எ.வ.வேலு கேட்டறிந்தார். முன்னதாக கொரோனா 2அலை காலத்தில் மாநிலம் முழுவதும் போர்க்கால அடிப்படியில் ஆக்சிஜன் வசதி கூடிய 11 ஆயிரத்து 993 படுகைகளை ஏற்படுத்தி கொடுத்த பொறியாளர்களை அமைச்சர் பாராட்டினார்.
மாதவரம் மண்டலம் 24வது வார்டில் உள்ள பல்நோக்கு கட்டிடத்தில் நூலகம், ரேஷன் கடை அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணிகள் தொடங்கியது: குடிநீர் வாரியம் தகவல்
நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார் நிறுவனங்களின் குடோன் கட்டுமான பணிக்கு எதிரான சிஎம்டிஏ நடவடிக்கை தவறானது: உயர் நீதிமன்றம் உத்தரவு
தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு தூக்கி எறிந்துள்ளது: விவசாயிகள்-தொழிலாளர் கட்சி குற்றச்சாட்டு
சென்னையின் 200 வார்டுகளிலும் பெண்களுக்கான நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
ஆர்எம்டி பொறியியல் கல்லூரியின் ஆண்டு விழா சிறந்த மாணவர்களுக்கு ரூ.35 லட்சம் பரிசு: கல்விக் குழும தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் வழங்கினார்
களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில் கொட்டி கிடக்கிறது: கொள்ளை லாபம் சம்பாதிக்க செயற்கை முறையில் பழுக்க வைப்பதால் ஆபத்து
சென்னை மாநகராட்சியில் முதல் அரையாண்டில் ரூ.382 கோடி சொத்து வரி வசூல்: கடந்த ஆண்டை விட ரூ.10 கோடி அதிகம்
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு