ஆரல்வாய்மொழி,: ஆரல்வாய்மொழி, முப்பந்தல், குமாரபுரம் மற்றும் பழவூர் ஆவரைகுளம், ராதாபுரம் ஆகிய பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காற்றாலைகளை நிறுவி அதன் மூலம் காற்றாலை நிறுவனங்கள் மின்சாரம் தயாரித்து வருகின்றன. குறிப்பாக ஆரல்வாய்மொழி முப்பந்தல் அருகே காற்றின் வேகம் அதிகமாக காணப்படுவதால் அந்த பகுதியில் அதிகமாக காற்றாடிகளை நிறுவி அதன் மூலம் அதிக அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு ஆரல்வாய்மொழி மூவேந்தர்நகர் அருகே உள்ள ஒரு காற்றாலை நிறுவனத்திற்கு சொந்தமான காற்றாடியின் மேல் பகுதியில் இருந்து தீப்பொறி கிளம்பியது.