பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே அத்திமாஞ்சேரிப்பேட்டையில் உள்ள ஏரி நீர் மூலம் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதிபெற்று வருகின்றது. கொதகுப்பம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், அத்திமாஞ்சேரிப்பேட்டை ஏரியில் இருந்து நடுகால்வாய் மூலமாக பெறப்படும் தண்ணீர் மூலம் பயிர் சாகுபடி செய்துவந்தனர். இந்தநிலையில் கொத்தகுப்பம் ஊராட்சி மன்ற தலைவரின் கணவன் மற்றும் அவரது உறவினர்கள் சிலர் சேர்ந்து தங்களது விவசாய நிலத்துக்கு அருகில் செல்லும் இரண்டு ஏரி பாசன கால்வாயை சில மாதத்துக்கு முன்பு ஆக்கிரமித்ததுடன் மணல் கொண்டு மூடிவிட்டதாக தெரிகிறது.