தீவிரவாதிகள் ஊடுருவ உள்ளதாக தகவல் வேதாரண்யத்தில் விடிய விடிய சோதனை

வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவ உள்ளதாக கிடைத்த தகவல் பேரில் போலீசார் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் கடல் வழியாக இலங்கையில் இருந்து 3 தீவிரவாதிகள் நவீன ஆயுதத்துடன் ஊடுருவ உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் வேதாரண்யம் டிஎஸ்பி மகாதேவன் தலைமையில் போலீசார் கடற்கரை பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். கோடியக்கரை, மணியன் தீவு, ஆறுகாட்டுத்துறை, பெரிய குத்தகை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி வரை கடற்கரையில் போலீசார் துப்பாக்கியுடன் விடிய விடிய சோதனை செய்தனர். அப்போது யாரும் சிக்கவில்லை. தொடர்ந்து போலீசார் கண்காணித்தது வருகின்றனர். இருப்பினும் வேதாரண்யம் பகுதியில் உள்ள 9 சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதனால் நேற்று முன்தினம் இரவு முதல் அதிகாலை வரை இப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

Related Stories: