குற்றம் தமிழகம், கர்நாடகாவில் இருந்து கடல் வழியாக கனடா செல்ல முயன்ற 23 இலங்கை தமிழர்கள் கைது..!! Jun 12, 2021 தமிழர்கள் கனடா தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் கர்நாடக மதுரை: தமிழகம் மற்றும் கர்நாடகாவில் இருந்து கடல் வழியாக கனடா செல்ல முயன்ற இலங்கை தமிழர்களை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் இருந்து இலங்கை தமிழர்கள் சிலர் கடல் வழியாக வெளிநாடுகளுக்கு செல்ல இருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி மதுரை புறநகர் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருந்த போலீசார், அங்கு பதுங்கி இருந்த 23 இலங்கை தமிழர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் சட்ட விரோதமாக கள்ளத்தோணியில் தமிழகம் வந்திருப்பது தெரியவந்தது. அதுமட்டுமின்றி மதுரை வழியாக கேரளா தப்பிச்செல்ல முயன்றதும் விசாரணையில் அம்பலமானது. இலங்கை தமிழர்கள் 23 பேரையும் கைது செய்த போலீசார், அவர்கள் கள்ளத்தனமாக கனடா செல்ல ஏற்பாடு செய்த ஏஜெண்டுகள் 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதேபோல் தமிழக போலீசார் அளித்த தகவலின் படி கர்நாடக மாநிலம் மங்களூருவிலும் 44 இலங்கை தமிழர்களை அம்மாநில போலீசார் கைது செய்தனர். இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழகம் வந்த இவர்கள், பாதுகாப்பு கருதி தூத்துக்குடியில் இருந்து மங்களூருவுக்கு சென்றுள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக மங்களூருவிலேயே முடங்கி கிடந்த 44 பேரும் மீண்டும் தூத்துக்குடி சென்று அங்கிருந்து கனடா நாட்டிற்கு செல்ல திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 44 பேரையும் கைது செய்துள்ள கர்நாடக மாநில போலீசார், அவர்கள் சட்டவிரோதமாக பாஸ்போர்ட் இல்லாமல் செல்ல உதவிய ஏஜெண்டுகளை தேடி வருகின்றனர்.
பணப்பட்டுவாடா மோதலில் சொந்த கட்சி பிரமுகருக்கு வெட்டு: பாஜ மாவட்ட தலைவர் உள்பட 3 பேர் கைது: 9 பேருக்கு வலை
மது அருந்தியது, கஞ்சா புகைத்தது, சிறுநீர் கழித்ததை தட்டி கேட்டதால் ஆத்திரம் மூதாட்டி கழுத்து அறுத்து படுகொலை: 3 பேர் கைது; திருவான்மியூரில் பயங்கரம்
நகைக்கடை சுவரை துளையிட்டு கொள்ளை லாக்கரை உடைக்க முடியாததால் 100 பவுனுக்கும் ேமல் நகை தப்பியது: தாம்பரத்தில் பரபரப்பு : மர்ம நபர்களுக்கு வலை
தேர்தல் பணம் விநியோகம் செய்ததில் மோதல் கட்சி பிரமுகருக்கு அரிவாள் வெட்டு திருவாரூர் பாஜ நிர்வாகி, ரவுடி கைது: மேலும் இருவருக்கு வலை
சென்னை திருவான்மியூரில் வீட்டில் தனியாக இருந்த பொன்னி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது..!!
ஆபாச படம் எடுத்து பெண்ணை பலாத்காரம் செய்த யூடியூப் சாமியாருக்கு வலை: பரிகாரம் தேடி சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம்
தேர்தல் பணம் விநியோகம் செய்ததில் மோதல்; பாஜ பிரமுகருக்கு சரமாரி வெட்டு: மாவட்ட தலைவர், செயலாளர் உள்பட 6 பேர் மீது வழக்கு
சென்னையில் தொடரும் சம்பவங்கள் நடைபயிற்சி சென்ற தம்பதியை வளர்ப்பு நாய் கடித்து குதறியது: பெண் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை