பாதுகாப்பு விதிமீறி செயல்பட்ட 3 சூப்பர் மார்க்கெட்களுக்கு சீல்

சென்னை: சென்னையில் கொரோனா குறைந்து வருவதன் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அத்தியாவசிய தேவைகளான மருந்து, மளிகை, காய்கறி, பால் போன்ற கடைகள் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது. சூப்பர் மார்க்கெட்கள் மற்றும் பெரிய அளவில் இயங்கும் கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள மூன்று சூப்பர் மார்க்கெட்கள் கடந்த 2 நாட்களாக கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறி செயல்படுவதாக விருகம்பாக்கம் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் மாநகராட்சி 10வது மண்டல கடை உரிமம் ஆய்வாளர் கவுதம் ஆகியோர், மேற்கண்ட சூப்பர் மார்க்கெட்களில் பணிபுரிந்த 50க்கும் மேற்பட்ட ஊழியர்களை வெளியேற்றி, 3 சூப்பர் மார்க்கெட்களுக்கும் சீல் வைத்தனர்.

Related Stories: