வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கப்பூரில் இருந்து வந்த மனித குரங்கு குட்டி ஈன்றது

சென்னை: சிங்கப்பூரில் இருந்து கொண்டு வரப்பட்ட பெண் மனித குரங்கு, வண்டலூர் உயிரியல் பூங்காவில் குட்டி ஈன்றது. ஆப்பிரிக்கா கண்டத்தில் வாழும் 28 வயதுள்ள கோம்பி என்ற ஆண் மனித குரங்கு, 23 வயதுள்ள கவுரி (சுசி) என்ற பெண் மனித குரங்கு சிங்கப்பூரில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்து,  2005 அக்டோபர் 1ம் தேதி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டது. இவை இரண்டும் இனப்பெருக்கம் செய்ததில் கடந்த 9ம் தேதி ஒரு குட்டியை ஈன்றது. இதில், தாயும் பிள்ளையும் நன்றாக உள்ளதாக பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்தனர். குரங்குகள், கொரோனா நேரம் என்பதால் பூங்கா மருத்துவர்களின் பாதுகாப்பில் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளன.

Related Stories: