மும்பை : கொரோனா ஊரடங்கு எதிரொலியாக பணி இல்லாததால் வருமானவரி செலுத்த தாமதம் ஆகிவிட்டதாக பாலிவுட் நடிகை கங்கனா ரெனாவத் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தி திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்த போதும் தனக்கு தற்போது வேலை எதுவும் இல்லாததால் சரியான நேரத்திற்கு வருமான வரி செலுத்த முடியவில்லை என்று கூறி இருக்கிறார்.