சென்னை: சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் தமிழக அரசு சார்பில் ஆஜராவதற்கு, 44 அரசு வக்கீல்களை தற்காலிகமாக நியமித்து தமிழக அரசு உத்தரவிடுள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 29 அரசு வக்கீல்களும், மதுரை கிளைக்கு 15 அரசு வக்கீல்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு வக்கீல்கள் நியமன நடைமுறைகள் முடிக்கப்படும் வரை இவர்கள் 44 பேரும் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்குகளில் ஆஜராவதற்காக ஏ.செல்வேந்திரன், ஆர்.அனிதா, ஏ.எட்வின் பிரபாகர், ஜி.கிருஷ்ணராஜா, வி.வேலுசாமி, வி.நன்மாறன், எஸ்.ஆறுமுகம், டி.அருண்குமார், வி.மனோகரன், சி.கதிரவன், சி.செல்வராஜ், டி.ஜெயப்பிரகாஷ், வி.பி.ஆர்.இளம்பரிதி, யு.பரணிதரன், ேக.திப்புசுல்தான், கே.எம்.டி.முகிலன், எல்.எஸ்.எம்.ஹசன்பைசல், எஸ்.ஜெ.முகமது சாதிக், யோகேஷ் கண்ணதாசன்,